அதைத்தொடர்ந்து மதிமுக மாநிலக்கட்சி அங்கீகாரம் பெற சட்டப்பேரவைத் தேர்தலில் 12 இடங்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கிய நிலையில், அதில் ஒரு தொகுதியில் மட்டுமே சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வெறும் 4 தொகுதி என்பதால் மதிமுக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக வழங்கிய சீட்டுகள் எண்ணிக்கை மதிமுகவின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை அளித்திருந்தாலும், அவர்கள் கொடுத்திருக்கும் தனிச்சின்னம் என்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
