ரயில்வே தட்கல் டிக்கெட் புதிய டோக்கன் முறை அமல்

இந்நிலையில் ரெயில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு தட்கல் டிக்கெட்டுகள் எடுக்கும் முன்பதிவு மையங்களில் எளிதாகவும், நெரிசலின்றியும் பெறுவதற்காக இந்திய ரெயில்வே டோக்கன் முறையைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில் அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய நடைமுறை, வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முறைகேடாக டிக்கெட் வாங்கும் இடைத்தரகர்களைத் தடுக்கவும் புதிய டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு தொடங்கும் முன்பே பயணிகள் தங்கள் வரிசையை உறுதிசெய்யும் வகையில், தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் முன்னதாகவே வழங்கப்பட உள்ளது.

வழக்கமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நேரங்களில், ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் கடுமையான கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. பயணச்சீட்டு முன்பதிவு தொடங்குவதற்கு முன்பே பயணிகள் பெருமளவில் வரிசையில் நிற்கின்றனர்.

சில இடங்களில், பயணிகள் டோக்கனுக்காக ஒரு முறையும், பயணச்சீட்டுக்காக மீண்டும் மற்றொரு முறையும் மையத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

Source link