திமுக கூட்டணியில் எந்த விதமான குழப்பமும் இல்லை. 17-க்கும் மேற்பட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளன. இது வெற்றி கூட்டணி. ஒவ்வொருவரும் பரஸ்பரமாக அவர்களது உரிமை குறித்து கேட்கத்தான் செய்வார்கள். சகோதர மனப்பான்மையுடன் திமுக பேசி தீர்க்கிறது.
தேர்தலுக்கு இன்னும் அதிகமாக நேரம் உள்ளது. எங்கள் கூட்டணியில் குழப்பம் உள்ளதாக எதிர்க்கட்சிகள்தான் தவறாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலையில் திமுக கூட்டணி செயல்படுகிறது.
விஜய் வந்தால் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார் என மக்கள் நினைத்தார்கள். ஆனால், சாதாரண மக்கள் கூட அவர் மீது நம்பிக்கையை தற்போது இழந்து விட்டார்கள். ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையில்கூட குரல் எழுப்ப முடியாதவர், மக்களுக்கான பிரச்சினையில் எப்படி குரல் எழுப்புவார்?
விஜய்யின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும் சந்தேகத்தையும் சஸ்பென்ஸை எழுப்புகிறது. இப்தார் நோன்பில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக விஜய் பேசுகிறார். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனமாக இருந்தார்” என்று அவர் தெரிவித்தார்.
