பாஜகவுக்குள் மோதல், அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் மோதல், அமைச்சர், நியமன எம்எல்ஏக்கள் மாற்றம் என பல குழப்பங்களும் நிலவியது. இவையெல்லாம் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந் தார்.
மத்தியில் 2014-ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி தொடர்ந்தாலும் புதுச்சேரியில் இதனால் தனித்து போட்டியிடும் அளவுக்கு பாஜக இன்னும் வலுப்பெறவில்லை.
இதனால்தான், ‘என்ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி தேவை’ என்ற நிலைக்கு புதுவை மாநில பாஜக தள்ளப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சர் காத்திருக்கும் சூழல்தான் நிலவுகிறது. புதுச்சேரியில், காங்கிரஸின் நிலைமையோ வேறு மாதிரியாக இருக்கிறது.
தொடர்ந்து காங்கிரஸ் வசம் இருந்த புதுச்சேரியில் கடந்த 2016-ல் புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கி ரஸ் அரசு அமைந்தது. இந்த ஆட்சிக்காலத்தில் மத்திய பாஜக, துணைநிலை ஆளுநர் மோதலால் புதுச் சேரியில் பலதிட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் போனது.
