தமிழகம் முழுவதும் ரூ.75 கோடி பணம், பொருள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 75 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம் மற்றும் பொருட்களை, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுதும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 23.74 கோடி ரூபாய் ரொக்கம், 51 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், 5.63 கோடி ரூபாய் மதிப்பிலான, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 23.19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி, 21.96 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் என, 75.03 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Source link