வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

முக்கிய அம்சங்கள்

* முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 50 லட்சம் வரை அபராதம்.

* குற்றத்தில் உடந்தையாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்படும்.

* ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறைகேடு கூட்டங்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ. 10 கோடி வரை அபராதம்.

* தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகள் வினாத்தாள் கசியவிட்ட புகாரில் சிக்கினால், 5 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

* அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Source link