இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து, மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து,ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதேபோல, நாகை மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்கள், தர்காக்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில், உலகம் முழுவதும் சமாதானமும் சாந்தியும் உண்டாவதற்கும், ஈரான் போர் முடிவுற்று அமைதி நிலவவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம்கள் அனைவரும் தவறாமல் 100% வாக்களித்து, தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனவும் நாகூர் தர்காபரம்பரை அறங்காவலர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் தலைமையில் முஸ்லிம்கள்பிரார்த்தித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
