மே ற்கு ஆசியாவில் போர் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.
நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 86,781 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.
இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில் “மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சந்தை இந்த வாரம் எச்சரிக்கையுடனே இருந்தது. வாரத்தின் துவக்கத்தில் பங்குகள் மலிவாக கிடைத்ததால், ஒரு சிறிய மீட்சி தெரிந்தாலும், எரிசக்தி வசதிகள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இது, பணவீக்கம் மற்றும் பொருளாதார கவலைகளை தூண்டியது. இதனால் சந்தை மீண்டும் சரிவை சந்தித்தது,” என்றனர்.
