தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரூ.75 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தேர்​தல் செல​வினக் கண்​காணிப்பை உறுதி செய்​யும் வித​மாக மாநிலம் முழு​வதும் கண்​காணிப்பு மற்​றும் அமலாக்​கக் குழுக்​கள் தீவிர​மாகப் பணி​யாற்றி வருகின்​றன. இந்​நிலை​யில். தமிழகம் முழு​வதும் நேற்​றைய (மார்ச் 21) நிலவரப்​படி, ரூ.23.74 கோடி ரொக்கம், ரூ.51 லட்​சம் மதிப்​பில் மது​பானங்​கள், ரூ.5.63 கோடி மதிப்​பில் போதைப்​பொருட்​கள், ரூ.23.1 கோடி மதிப்​பில் தங்​கம், வெள்ளி பொருட்​கள், ரூ.21.96 கோடி மதிப்​பில் இலவச​மாக வழங்க கொண்டு செல்​லப்​பட்ட இதர பொருட்​கள் என மொத்​தம் ரூ.75 கோடி மதிப்​பில் ரொக்​கம் மற்​றும் பொருட்​கள் பறிமுதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

வேட்​பாளர்​கள் மற்​றும் அரசி​யல் கட்​சிகள் இணை​ய​வழி வேட்​புமனு தாக்​கல்,வேட்​புமனு சமர்ப்​பிப்​ப​தற்​கான நேர ஒதுக்​கீடு​களை முன்​ப​திவு செய்​தல், பொதுக் கூட்​டங்​கள், பேரணி​கள் உள்ளிட்ட அனு​ம​தி​களுக்​கான விண்​ணப்​பங்​கள் போன்ற தேர்​தல் நடை​முறை​களைப் பின்​பற்​று​வதற்கு வசதி​யளிக்​கும் ஒரு விரி​வான டிஜிட்​டல் தளத்தை தேர்​தல் ஆணை​யத்​தின் சுவிதா இணை​யதளம் (http://suvidha.ecl.gov.in/) வழங்கு​கிறது.

Source link