தேர்தல் செலவினக் கண்காணிப்பை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில். தமிழகம் முழுவதும் நேற்றைய (மார்ச் 21) நிலவரப்படி, ரூ.23.74 கோடி ரொக்கம், ரூ.51 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், ரூ.5.63 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.23.1 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.21.96 கோடி மதிப்பில் இலவசமாக வழங்க கொண்டு செல்லப்பட்ட இதர பொருட்கள் என மொத்தம் ரூ.75 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையவழி வேட்புமனு தாக்கல்,வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்தல், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் (http://suvidha.ecl.gov.in/) வழங்குகிறது.
