அதன் பின்னர், சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரி, மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ், மருமகள் பிராம்மனி மற்றும் பேரன் நாரா தேவான்ஷ் ஆகியோருடன் இணைந்து தரிகொண்டா வெங்கமாம்பாள் அன்னதான கூடத்திற்கு சென்றார். அங்கு, பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியை சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் பரிமாரியதுடன், பக்தர்களுடன் இணைந்து உண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று, திருமலையில் 12 ஆயிரம் சதுர அடியில் ரூ.25 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன உணவு மற்றும் நீர் பரிசோதன மையத்தை திறந்து வைத்தார். திருமலையில் செயற்கை நுண்ணறிவு கமாண்ட் கண்ட்ரோல் மையத்தை அவர் ஆய்வு செய்தார்.
