டெஹ்ரான்: ஈரானில் இருந்து 4,000 கி.மீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ராணுவ முகாம் மீது ஏவுகணை வீசி உலக நாடுகளை மிரளவைத்துள்ளது ஈரான்.
ஈரான் தன்னிடம் 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன என்றுதான் இதுவரை உலகுக்கு அறிவித்திருந்தது. ஆனால், ஈரானிலிருந்து 4,000 கி.மீ. தொலைவில், இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்கும் டியாகோ கார்சியோ தீவு மீது ஏவுகணைகளை வீசி உலக நாடுகளை மிரட்டியுள்ளது. இந்த தீவில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவ முகாம் உள்ளது. இங்குதான் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
