சென்னை: ‘தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க.,வுக்கு 12 ‘சீட்’ வழங்க வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 23ல் நடக்கிறது.
இந்த சூழலில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் சந்தித்தார்; தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் பீயூஷ் கோயலையும் சந்தித்தார்.
அப்போது, தே.ஜ., கூட்டணியில் அ.ம.மு. க.,வுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் ஒதுக்குமாறு தினகரன் வலியுறுத்தி உள்ளார்; குறைந்தது 12 தொகுதிகள் வழங்கும்படி கேட்டுள்ளார்.
இது குறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், தேனி, திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் அ.ம.மு.க., போட்டி யிட்டது. தென் மாவட்டங் களில், அ.ம.மு.க.,வுக்கென கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
‘இதனால், இந்த சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில், 12 தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம்; பரிசீலிப்பதாக பா.ஜ., தலைமை தெரிவித்துள்ளது’ என தெரிவித்தனர்.
