டெஹ்ரான்: ஈரானைத் தொடர்ந்து குறிவைக்குமாறு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி

டெஹ்ரான்: ஈரானைத் தொடர்ந்து குறிவைக்குமாறு அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி கேட்டுக்கொண்டார்.

50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி கூறியதாவது: தனது நாடு ஒரு இஸ்லாமியக் குடியரசு அல்ல. மத்திய கிழக்கு நாட்டைப் பாதுகாக்க தற்போதைய ஆட்சி கலைக்கப்பட வேண்டும். ஈரானில் உள்ள ஆட்சியைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் குறிவைக்க வேண்டும். இருப்பினும், ஈரானை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்நாட்டின் குடிமை உள்கட்டமைப்புகளை விட்டுவிட வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதரவாலும், ஈரானிய தேசபக்தர்களின் தியாகத்தாலும், ஈரானின் சுதந்திரத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஈரானின் குடிமை உள்கட்டமைப்பு ஈரான் மக்களுக்கும், ஒரு சுதந்திர ஈரானின் எதிர்காலத்திற்கும் சொந்தமானது. இஸ்லாமியக் குடியரசின் உள்கட்டமைப்பு என்பது, அந்த எதிர்காலம் நனவாவதைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடக்குமுறை மற்றும் பயங்கரவாதத்தின் இயந்திரமாகும்.

ஈரான் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும். இவ்வாறு ரெசா பஹ்லவி கூறியுள்ளார். ஈரான் ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து, ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி. அவர் அமெரிக்கத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ஆதரித்ததோடு, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாட்டிற்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link