சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள சிபிஐ(எம்) மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலிலேயே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அவர்களது சொந்தக் கட்சித் தொண்டர்களே இந்த ஒப்பந்தத்தை நிராகரிப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
ஏற்கெனவே இப்படி முயன்று அவர்கள் அம்பலப்பட்டார்கள். இப்போதும் அதேநிலைதான் ஏற்படும். இந்த ரகசிய கூட்டணி வெற்றி பெறாது. தற்போதைய அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, யுடிஎஃப் ஆட்சியின் திட்டங்களையும் முன்வைத்து வருகிறோம்.
கேரளாவுக்கான குறிப்பிட்ட திட்டங்கள் அடங்கிய விரிவான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சிக்கு வந்தால், பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
