புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, லோக்சபாவில் இன்று (மார்ச் 23)

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, லோக்சபாவில் இன்று (மார்ச் 23) பகல் 2:00 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

2026ம் ஆண்டிற்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரையுடன் தொடங்கி, பொருளாதார ஆய்வறிக்கை, பட்ஜெட் விவாதம், மற்றும் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டது.

பார்லிமென்டில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், ​​பிரதமர் மோடி இன்று (மார்ச் 23) பிற்பகல் 2 மணிக்கு லோக்சபாவில் உரையாற்ற உள்ளார். அப்போது அவர், மேற்கு ஆசிய மோதலின் முக்கிய அம்சங்களையும், இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைப்பார்.

Source link