பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்காமல் தூங்கிய ஊழியர் சஸ்பெண்டு

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வழங்கும் ஊழியர் தயார் நிலையில் இருக்க வேண்டும். பணி நேரத்தில் தூங்குவது தவறு என்றும் அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன் கூறும் போது, ரெயில் ஒன் செயலியின் மூலம் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெரும் வசதி மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை சரியாக விளம்பரம் செய்யவில்லை. ரெயில் நிலையங்களில் இன்னும் யூ.டி.எஸ். செயலி மூலம் டிக்கெட் பெறலாம் என்று அறிவிப்புகள் உள்ளன. அதனால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்றார்.

Source link