அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக, மத்திய கிழக்கில் நாங்கள் முன்னெடுத்திருந்த மாபெரும் ராணுவ நடவடிக்கைகளை முடித்து கொள்ளும் சூழலை பரிசீலித்து வருகிறேன். ஏனென்றால் எங்களது இலக்குகளை அடைவதற்கு நாங்கள் மிக நெருக்கமாக வந்துவிட்டோம்.
ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் நாடுகளே, தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து, கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் . அதை அமெரிக்கா செய்யாது. அந்த நாடுகள் கோரிக்கை விடுத்தால் நாங்கள் உதவுவோம்.
ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு, அத்தகைய உதவிக்கான தேவை இருக்காது. அந்த நாடுகளுக்கு இது ஒரு எளிமையான ராணுவ நடவடிக்கையாகவே அமையும்
இவ்வாறு கூறினார்.
