புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி சென்றுவிட்டார். இதனால், அவர் பார்லிமென்டில்

புதுடில்லி: அதிபர் டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி சென்றுவிட்டார். இதனால், அவர் பார்லிமென்டில் நடக்கும் விவாதங்களில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: லோக்சபாவில் பிரதமர் மோடி 25 நிமிடங்கள் பேசியதை கேட்டேன். ஆனால், பார்லிமென்டில் நடக்கும் விவாதத்தில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதற்கு நான் கியாரண்டி. அவர் சமரசம் செய்து கொண்டதே அதற்கு காரணம். 25 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. டிரம்ப்பின் முழுக்கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி சென்றுவிட்டார்

வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் விவசாய சந்தையை அமெரிக்காவுக்கு மோடி திறந்துவிட்டார். இந்தியாவில் சிறுவிவசாயிகள் உள்ளனர். ஆனால், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். இங்கு கையால் விவசாய பணிகள் நடக்கும் நிலையில், அமெரிக்காவில் பெரிய இயந்திரங்கள் மூலம் பணிகள் நடக்கின்றன. அமெரிக்கபொருட்கள் இந்திய வந்தால், நமது விவசாயிகள் அழிந்துவிடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Source link