சென்செக்ஸ் 1800+ புள்ளிகள் வீழ்ச்சி – ரூ.12 லட்சம் கோடி இழப்பு

உலகளவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை காரணமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு ஏற்பட்டதாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால், இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது.

இந்திய பங்குச் சந்தை மட்டும் அல்லாது ஆசிய பங்குச்சந்தையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. உலகளவிலான பதற்றம் மேலும் நீடித்தால் உலகளவில் பணவீக்கம் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடையும் என அஞ்சப்படுகிறது.

Source link