பைன் கியாஸ் (Pine Gas), ஜாக் வசந்த் (Jag Vasanth) ஆகிய இரண்டு கப்பல்களும் பாரசீக வளைகுடா பகுதியில் அருகருகே நின்றுள்ளனர். இரண்டு கப்பல்களும் இந்தியா கொடியுடன் ஈரானின் டாரக் மற்றும் குயேஷ்ம் தீவு இடையே நிற்பனை உறுதி செய்த ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதி அளித்துள்ளது.
அதனடிப்படையில் இரண்டு கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. இந்த இரண்டு கப்பல்களுடன் வருகிற 26 மற்றும் 28-ந்தேதி இந்திய துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கப்பல்களிலும் முறையே 33 மற்றும் 27 இந்தியர்கள் உள்ளனர்.
இந்திய கொடியுடன் இன்னும் 20 கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரான்- ஓமன் இடையே உள்ளது. வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை கடல் வழியாக உலக நாடுகளுக்கு எடுத்துக் செல்லும் முக்கியமான குறுகிய வழி கொண்ட போக்குவரத்து பகுதியாக உள்ளது.
