ஜெருசலேம்: ''அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு

ஜெருசலேம்: ”அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தமும் எங்களின் முக்கிய நலன்களைப் பாதுகாக்கும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: இன்று முன்னதாக, நமது நண்பரான அதிபர் டிரம்புடன் நான் உரையாடினேன். அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து நாம் எட்டியுள்ள மகத்தான சாதனைகளை, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போர் இலக்குகளை அடைவதற்குப் பயன்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் கருதுகிறார். அந்த ஒப்பந்தமானது நமது மிக முக்கிய நலன்களைப் பாதுகாப்பதாக அமையும்.

அதே வேளையில், ஈரானிலும் லெபனானிலும் நாம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறோம். அவர்களின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் நாம் நசுக்கி வருகிறோம்; மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்து வருகிறோம்.

சில நாட்களுக்கு முன்புதான், மேலும் இரு அணுசக்தி விஞ்ஞானிகளை நாம் ஒழித்துக்கட்டினோம். எத்தகைய சூழலிலும், நமது மிக முக்கிய நலன்களை நாம் பாதுகாப்போம். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Source link