ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

புதுடெல்லி: மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர் பதற்றங்களுக்கு மத்​தி​யில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணை வழி​யாக சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதனால், இந்​தியா உள்​ளிட்ட நாடு​களில் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், இந்​திய அரசு ஈரான் அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதன் மூலம் 2 எரி​வாயு கப்​பல்​கள் இந்தியா வந்​தடைந்​தன. இந்​நிலை​யில் எரி​வாயு ஏற்றப்பட்ட மேலும் 2 இந்​தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​ யாகப் பயணிக்​கின்​றன. ஈரான் நாட்​டின் ஒப்​புதலுடன், அதன் கடற்​கரைக்கு மிக நெருக்​க​மான பாது​காப்​பான பாதையை இக்​கப்​பல்​கள் பின்​பற்​று​வ​தாகக் கப்பல் கண்​காணிப்​புத் தரவு​கள் தெரிவிக்​கின்​றன.

Source link