தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற சோதனைகளில் ரூ.152 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல்

அதன்​படி, உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் ரொக்​க​மாகவோ, ரூ.10 ஆயிரம் மதிப்​புக்கு மேல் பொருட்​களாகவோ கொண்டு செல்ல அனு​மதி இல்​லை.

விதி​மீறல்​களை கண்​காணிக்க தமிழம் முழு​வதும் தலா 2,106 பறக்​கும் படைகள் மற்​றும் நிலை கண்​காணிப்பு குழுக்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் மூலம் கணிச​மான அளவு பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

நேற்​றைய நில​வரப்​படி ரொக்​க​மாக ரூ.30.53 கோடி, ரூ.72 லட்​சம் மதிப்பு மது​பானம், ரூ.6.47 கோடி மதிப்பு போதைப்​பொருட்​கள், ரூ.92.02 கோடி மதிப்​பிலான தங்​கம் மற்​றும் வெள்ளி பொருட்​கள், ரூ.22.19 கோடி மதிப்​பிலான இலவச​மாக வழங்க வைத்​திருந்த பொருட்​கள் மற்​றும் பிற பொருட்​கள் என மொத்​தம் ரூ.152 கோடி மதி்ப்​பிலானவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link