சென்னை: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அலுவலகத்திற்கு ஜிகே வாசன் செல்லாததால் அதிருப்தியா என்ற

சென்னை: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அலுவலகத்திற்கு ஜிகே வாசன் செல்லாததால் அதிருப்தியா என்ற கேள்வி எழுந்தது. தேஜ கூட்டணியில் தமாகாவுக்கு எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது என ஜிகே வாசன் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., பா.ஜ., அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அ.தி.மு.க., பொது செயலாளர் இபிஎஸ் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு இறுதியானது.

பா.ஜ., தரப்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அதிமுக அலுவலகத்திற்கு ஜிகே வாசன் செல்லாததால் அதிருப்தியா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 24) ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நேற்று இரவு, நான் சென்னையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தேன். நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில், தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு ஜிகே வாசன் கூறியுள்ளார்.

Source link