ராணிப்பேட்டை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருத்தணியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். நேற்று இரவு அவர் ராணிப்பேட்டையில் உள்ள முத்துக்கடை பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
தமிழகம் இன்று வரை அரை அங்குல வளர்ச்சியை கூட பெறவில்லை. மகளிருக்கு முதலில் 1000 ரூபாய், அடுத்து 2 ஆயிரம் ஓட்டுக்கு முன்பு 500 ரூபாய், இப்போது 1000 ரூபாய், மது விற்பனையை 45 ஆயிரம் கோடியிலிருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவார்கள் இதுவா தமிழகத்தின் வளர்ச்சி?
