முன்பெல்லாம் தேர்வு முடிந்து தேர்வு அறையை விட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகள் கத்தி கூச்சலிட்டு, ஒருவர் மீது ஒருவர் பேனா மையை பூசியும், வண்ண பொடிகளை தூவியும் தங்களது நட்பை வெளிப்படுத்துவது வழக்கம். தற்போது இந்த பழைய கலாச்சாரம் கசந்துவிட்டதால் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்றவற்றில் வெளியிடப்படும் ஆபத்தான செயல்களை நாமும் செய்தால் என்ன என்ற மனநிலை உள்ள மாணவ, மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
இந்நிலையில், வட இந்தியர்களின் கலாச்சாரமாக தற்போது டிரெண்டிங் ஆகி வரும் ஒரு ஆபத்தான செயலை திருப்பத்தூர் மாணவிகள் நேற்று பொதுவெளியில் செய்து அதை வீடியோவாக எடுத்து சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்தது தற்போது வைரல் ஆகி வருகிறது.
