சென்னை: சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த திமுக தனது ரவுடித்தனத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைப்பதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
சிவகங்கையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் சேங்கை மாறனின் கூலிப்படை ஆட்கள் ஊடகவியலாளரை கொடூரமாகத் தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகவியலாளர்கள் தொடங்கி, பெண்கள், விவசாயிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என திமுகவின் ரவுடிகளால் யாருக்கும் ஆட்சி முடியும் தருவாயிலும் கூட பாதுகாப்பில்லை. சட்டசபைத் தேர்தலில் தோல்வியை உணர்ந்த திமுக தனது ரவுடிதனத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என நினைக்கிறதா? அல்லது தான் தோற்கும் போது தமிழகத்தில் யாருமே இருக்கக் கூடாது எனக் கொலைவெறியில் ஆடுகிறதா?
மொத்ததில், இனியொரு முறை திமுகவின் ரவுடியிச ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் என்பதையே இந்தக் கொடூரத் தாக்குதல் உணர்த்துகிறது. தமிழகமும் தமிழ் மக்களும் வாழ வேண்டுமென்றால், திமுக வீழ வேண்டும், வன்முறையைக் கையில் எடுக்கும் திமுக.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
