சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என

சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

* ரேசன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச பிரிட்ஜ்

* முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்

* அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

* வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை

* 5 லட்சம் பெண்கள் டூவிலர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

பழைய வாக்குறுதிகள்

ஏற்கனவே 3 கட்டங்களாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டு இருந்தார்.

அதில்

* அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை –

* ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணத் திட்டம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி

* அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தரப்படும்

* 125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் –

* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள் –

* விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை ( ஒரு முறை மட்டும்)

* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்

* ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடந்தோறும் ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை

* கைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் வரை இலவச மின்சாரம்

*கூட்டுறவு வங்கிகளில் சிறு வியாபாரிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து இருந்தார்.

Source link