அதிமுக மாவட்டச் செயலாளர் உள்ளடி; கழற்றிவிடப்பட்ட பார்த்திபன் – சோளிங்கர் களேபரம் | a dispute has arisen within the alliance after the sholingur assembly constituency was allotted to the pmk instead of the ammk

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை அறிவித்துவிட்டார் டி.டி.வி.தினகரன்.

அதாவது, சோளிங்கரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், `யாருக்கும் விலை போகாத தங்கம் பார்த்திபன்தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுவார். தி.மு.க-வுக்கான சாவு மணியை இங்கிருந்து அடிப்போம்’ என்றார்.

இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வுக்கு பதினோரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோளிங்கர் தொகுதி இடம்பெறவில்லை என்கிறார்கள். மாறாக, பா.ம.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர்களின் ஆதரவாளர்களும் அ.தி.மு.க கூட்டணி மீது வெறுப்படைந்திருக்கிறார்கள்.

என்.ஜி.பார்த்திபன்

என்.ஜி.பார்த்திபன்

`ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில், பா.ம.க-வுக்கு ஆற்காடு தொகுதியும், அ.ம.மு.க-வுக்கு சோளிங்கர் தொகுதியும், அ.தி.மு.க-வுக்கு அரக்கோணம் தனித் தொகுதியும், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை தொகுதியும் ஒதுக்கப்படும்’ என்பதே என்.டி.ஏ மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி, அடிமட்ட தொண்டர்களாலும் உத்தேசிக்கப்பட்டது.

இவ்வளவு களேபரத்துக்கும் ஒரே காரணம், `பா.ம.க-வுக்கு கிடைக்க வேண்டிய ஆற்காடு தொகுதியை அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான எஸ்.எம்.சுகுமார் தான்னோன்றித்தனமாக கைப்பற்றியதே’ என்று கொதிக்கிறார்கள் என்.டி.ஏ கூட்டணியினர்.

கடந்த தேர்தலின்போது, ராணிப்பேட்டை தொகுதியில்தான் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுமார், தி.மு.க-வின் சிட்டிங் அமைச்சரான ஆர்.காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தத் தேர்தலிலும், தோல்வி பயம் வந்துவிட்டதால், ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட விருப்பமில்லாமல், ஆற்காடு தொகுதிக்கு தாவிச் சென்றிருக்கிறார் சுகுமார் என்று அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களுமே விமர்சிக்கிறார்கள்.

Source link