அதைத்தொடர்ந்து 12-ம் தேதி நிலைமையின் தீவிரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. 14-ம் தேதி தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் எல்பிஜி-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என அறிவித்தோம்.
மேலும், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை பெறத் தேவையில்லை என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வெளியிட்டோம்.
