புதுச்சேரி நலன் ஒன்றை மட்டும் கருதி பாஜக தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, என்டிஏ அரசை மீண்டும் கொண்டு வந்து மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுப்பது தான் கடமை என்று பணியாற்றி வருகிறது.
வரும் 27 முதல் 29 வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரத்துக்கு வருகின்றனர்.
அதேபோல் ஏப். 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இங்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’-வில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
