அந்த கூட்டமைப்பில் வால்மார்ட்டின் ராப் வால்டன், போர்டு நிறுவனத்தின் ஹாம்ப் குடும்பத்தினர் இணைந்துள்ளனர். 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், உரிமையாளர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விற்பனையில் கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே செய்த சிறப்பான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வார்னே செயல்பட்டு கோப்பையை வெண்றுகொடுத்தார். மொத்தம் 4 வருடம் அந்த ராஜஸ்தான் அணியின் வார்னே விளையாடினார். அதற்காக மொத்தமாக அவர் 9 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். ஆனால் சம்பளம் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் அணியின் பங்குகளில் 0.75% பங்கு அவருக்கு கொடுக்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் அவர் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் போடும்போது ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.320 கொடிதான். அதன்பிறகு 4 சீசன்களில் விளையாடி மொத்தம் 3% பங்குகளை வார்னே வைத்திருந்தார்.
