வருகிற மே மாதம் 27 அல்லது 28-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மே மாதம் பொதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். இதனால், ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவு இருக்கும். இதுதவிர கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் ரெயில்களில் அதிகம் பயணிப்பது உண்டு.
எனவே, பக்ரீத் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து செல்ல விரும்புபவர்கள் நாளை (வியாழக்கிழமை) மே மாதம் 25-ந் தேதிக்கு முன்பதிவு செய்யலாம்.
