20. பவானி (104) : கே.சி.கருப்பணன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
21. ஜோலார்பேட்டை (49) : கே.சி.வீரமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
22. கரூர் (135) : எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்
23. அரியலூர் (149) : தாமரை எஸ்.ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு முன்னாள் தலைமைக் கொறடா, ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர் பட்டியலின் படி 23 வேட்பாளர்களில் 16 பேர் சிட்டிங் எம்எல்ஏ.க்கள், ஒருவர் எம்.பி. அது மட்டுமின்றி, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று பாஜக முனைப்புக் காட்டிய நிலையில் அதிமுக இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மதுரை மேற்கு செல்லூர் ராஜூவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் 8-வது முறையாகப் போட்டியிடுகிறார்.
முன்னதாக நேற்று (மார்ச் 24), தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டுக்கு இலவச பிரிட்ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார். இந்நிலையில் இன்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுக-வுக்கு 11 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மார்ச் 25-ம் தேதி (இன்று) முதல் வரும் ஏப்ரல் 1-ம் தேதி வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
