1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க.வால், அதன்பின்னர் நடந்த 5 தேர்தல்களிலும் பாதியளவு தொகுதிகளை கூட கைப்பற்ற முடியவில்லை. அதிலும் 2001, 2011, 2021 தேர்தல்களில் கோவையில் தி.மு.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ.க்கள் கூட கிடைக்கவில்லை.
இதற்கு அ.தி.மு.க.வை போன்று வலுவான தலைவர்கள் தி.மு.க.வுக்கு இல்லாததே காரணம் என கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
இதனால் 2021 சட்டசபை தேர்தல் முடிந்ததுமே, 2026 சட்டசபை தேர்தலில் மேற்கு மண்டலத்தை முழுவதுமாக கைப்பற்ற வியூகம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்தார்.
