ஈரானுக்காக காஷ்மீரில் நன்கொடை திரட்டும் இயக்கம்

புதுடெல்லி: அமெரிக்கப் போரினால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு, காஷ்மீரிகள் பணம், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை, டெல்லியிலுள்ள ஈரான் தூதரகம் வழியாக நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்களுக்கு உதவ காஷ்மீரில் ஒரு மாபெரும் நன்கொடை திரட்டும் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை முடிந்த ரம்ஜான் பண்டிகைக்கு மறுநாள் முதல் இது வேகம் பெற்றுள்ளது.

இந்த நன்கொடை திரட்டும் இயக்கத்தில், மக்கள் பணம் மட்டுமல்லாமல், தங்க நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்குகின்றனர்.

Source link