சென்னை:
நடிகை கவுதமி ஏற்கனவே பா.ஜ.க.வில் இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.
பின்னர் 2024-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க.வில் நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
வருகிற சட்டசபை தேர்தலில் நடிகை கவுதமி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் களமிறங்க தயாராகி வந்தார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவும் அளித்தார்.
