பீகாருக்கு அடுத்தபடியாக 18 கஸ்டடி மரணங்களுடன் ராஜஸ்தான், 15 உடன் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதிலும் 9 மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் பாதியிலேயே அந்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கடந்த 74 நாட்களில் தமிழநாட்டில் 7 கஸ்டடி மரணங்களும், தெலுங்கானாவில் 5, கர்நாடகாவில் 3, கேரளாவில் 3 கஸ்டடி மரணங்களும் பதிவாகி உள்ளன.
