இந்தியாவிலேயே நடிகராக இருந்து சட்டமன்றத்துக்குள் நுழைந்த முதல் நபர் யார் தெரியுமா? | Do you know who was the first person in India to enter a legislative assembly as an actor?

முதல் நடிகராக சட்டமன்றத்தில் நுழைந்த ராஜேந்திரன்

1962ம் ஆண்டு திராவிடர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் நடிகராக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் எம்.பி., ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வில் அவருக்கு எதிராக எழுந்த சிக்கல்களால் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி எம். ஜி.ஆர் துவங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார்.

1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றார். அந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ராஜேந்திரன்.

எஸ்.எஸ் ராஜேந்திரன்

எஸ்.எஸ் ராஜேந்திரன்

இறுதிக்காலத்தில் அரசியலில் விலகல்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு சில காலம் தனிக் கட்சித் தொடங்கி செயல்பட்டவர், பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

அதன்பிறகு திருநாவுக்கரசுடன் இணைந்து செயல்பட்டவர், இறுதிக்காலத்தில் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

பிறகு திரையரங்கு, படப்பிடிப்பு ஸ்டூடியோ, ஒலிப்பதிவு தியேட்டர் போன்றவற்றை நிர்வகித்து வந்தவர் நுரையீரல் தொற்று காரணமாக 2014 ஆம் ஆண்டு மறைந்தார்.

Source link