சென்னை: உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், அன்புமணி இன்றைக்குள் பதிலளிக்க சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்கக் கோரியும், பாமகவின் பெயர், கொடி, மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும், பாமக தொடர்பான உள்கட்சி பிரச்சினை முடிவுக்கு வரும்வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரியும் ராமதாஸ் தரப்பில் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
