இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் கட்சி தலைவர் விஜய் ஏற்கனவே நேர்காணல் நடத்தி முடித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடந்தது.
அதில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதால் 234 தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே ஆவணங்கள் பெறப்பட்டன. இந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளும் நடந்து வந்தது.
ஏற்கனவே முதல் கட்டமாக 114 பேரை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரச்சொல்லி அவர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வக்கீல், ஒரு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி நியமிக்கப்பட்டு, போட்டியிட இருப்பவர்களின் ஆவணங்கள் தவறில்லாமல் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.
