இதில் நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிரவ் மோடி, லண்டன் ஐகோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார்.
அதில் இந்தியாவில் சிறையில் அடைத்தால் தான் சித்ரவதை செய்யப்படுவேன் என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், இந்தியச் சிறை அமைப்பு மோசமாக உள்ளது என்றும் நிரவ் மோடி வாதிட்டார்.
