அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

கூடுதல் தொகுதிகள் வாங்கலாம் என திமுக தலைமையை அணுகிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீனுக்கு, கொடுக்கப்பட்ட தொகுதிகளைப் பார்த்ததும் திருமாவளவனுக்கு மயக்கமே வந்துவிட்டது.

ஓரளவு பெரிய கட்சிகளே அல்லாடிக் கொண்டிருந்தபோது, மற்ற சிறிய கட்சிகளால் மூச்சுவிடக்கூட முடியவில்லை.

ஒரு சில சீட்டுகள் தான் தருவோம், அதிலும் ‘டார்ச் லைட்டை’ ஆஃப் செய்துவிட்டு உதயசூரியனிலேயே ஒளி வீசுங்கள் என்று திமுக திரும்ப திரும்ப சொன்னதால், மக்கள் நீதி மய்யம் போட்டியே போடாது என்று சொல்லிவிட்டு ‘ தேர்தல் தியாகி’ ஆனார் கமல்ஹாசன்.

என்னன்னமோ பேசி சீட்டு கேட்டுப் பார்த்த வேல்முருகன் வேறு வழியின்று கூட்டணியை விட்டே வெளியேறிவிட்டார்.

இவை எல்லாவற்றையும் விட தேமுதிக, மநீம போன்ற புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால்தான் உங்களுக்கு தொகுதிகளை குறைக்கிறோம் என திமுக காரணம் சொன்னது. அதில், மநீம தேர்தலே வேண்டாம் என விலகிவிட்டார்கள். ஆனால், தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை அள்ளிக் கொடுத்ததால் எல்லா தோழமைக் கட்சிகளும் வாயடைத்துப் போனார்கள்.

Source link