“இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா?” – மத்திய அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகப் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகளாவிய நிலைமை தொடர்ந்து மாற்றத்திற்குள்ளாகி வருகிறது. எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் குறித்த முன்னேற்றங்களை நாங்கள் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். 

பிரதமர் மோடி தலைமையின் கீழ்,  குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற முக்கியமான பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது உருவாகி வரும் சவால்களைக் கையாள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம். உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் இந்தியா தொடர்ந்து தனது மீள்திறனை நிரூபித்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து சரியான நேரத்தில், முன்கூட்டியே திட்டமிட்டு, ஒருங்கிணைந்த முறையில் செயல்படுவோம். 

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாகப் பரவும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இந்திய அரசின் பரிசீலனையில் அத்தகைய திட்டம் எதுவுமில்லை என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம். இச்சூழ்நிலையில் வதந்திகளைப் பரப்புவதும், பீதியை உருவாக்குவதும் பொறுப்பற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்களாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link