ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம்

சென்னை: வேலூர் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ் குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங் – எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை கமிஷனர் ஆகவும்

பொள்ளாச்சி ஏஎஸ்பி சிருஷ்டி சிங்- எஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி தெற்கு போலீஸ் கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ராஜேஸ்வரி – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி ஆகவும்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஐஜி கயல்விழி-தமிழ்நாடு சீரடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி ஆகவும்

காத்திருப்பு பட்டியலில் இருந்த ரம்யா பாரதி- சென்னை குற்றப்பிரிவு ஐஜி ஆகவும்

சேலம் வடக்கு துணை கமிஷனர் சிவராமன் – வேலூர் எஸ்பி ஆகவும்

வேலூர் எஸ்பி மயில்வாகனன்- சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு எஸ்பி ஆகவும்

திருச்சி தெற்கு துணை கமிஷனர் டி. ஈஸ்வரன் – ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஆகவும்

ரயில்வே எஸ்பி ஐ. ஈஸ்வரன்- கோயம்பேடு துணை கமிஷனர் ஆகவும்

கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித் குமார் – சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும்

சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சுஹாசினி – தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி ஆகவும்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பி நாகஜோதி – போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்பி/ முதல்வர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Source link