போர் நேரத்தில், ஆட்சி மாற்றத்திற்கு ஏன் ஈரான் மக்கள் போராடவில்லை?|Why Iran People Aren’t Protesting Despite War?

ஒன்று, மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்கள் மற்றும் சொத்துகளை அழிப்பது.

மற்றொன்று, மேற்கு ஆசிய நாடுகளில் பிரச்னையை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு குந்தகம் விளைவிப்பது.

இந்த இரண்டையுமே ஈரான் செய்யாது. காரணம், தாங்கள் ஆரம்பித்தால் அமெரிக்கா சும்மா விடாது என்று ஈரானுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அது வீண் வம்பிற்கு போகாது.

ஆனால், ஈரானும், இஸ்ரேலும் பக்கத்து பிராந்திய நாடுகளே. அதனால், ஒன்று வளர்வது இன்னொன்றுக்குப் பிடிக்காது. இது இயற்கையானது.

இஸ்ரேல் தன்னுடைய வாழ்வாதாரத்திற்குப் பிரச்னை என்றால், பொறுத்துக்கொண்டு இருக்காது. இதற்கு பாலஸ்தீனப் போரே நல்ல உதாரணம்.

அதனால் தான், இஸ்ரேல் ஈரானைப் பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறது.

நெதன்யாகு

நெதன்யாகு
Netanyahu | Instagram

இஸ்ரேலுக்கு ஈரான் முழுவதுமாக அழிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஈரானில் உள்ள ஆட்சியை மாற்றினாலே போதுமானது.

அயோதுல்லா அலி கமேனி அந்தப் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்பது மறுப்பதற்கில்லை. அவரை இஸ்ரேலால் கண்டிப்பாக வழிக்குக் கொண்டுவர முடியாது.

அவர் ஈரானை முன்னிறுத்தியே காய்களை நகர்த்துவார். அவரை அகற்றிவிட்டாலே, இஸ்ரேலுக்கு உள்ள அச்சுறுத்தல் போய்விடும்.

Source link