இந்நிலையில், அவர் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிந்தது. பின்னர் அங்குள்ள போலீஸார் உதவியுடன் ஞானவேல் பாபுவை இன்று தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
முன்னதாக, ஞானவேல் பாபுவை கைது செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பேராசிரியர் ஞானவேல் பாபுவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, அவர் மீது மேலும் சில மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
