சென்னை: மெட்டா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் அதன் மொத்த ஊழியர்களில் (சுமார் 79,000 பேர்) 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வர, பொருளாதார சிக்கல்கள், வணிக ரீதியான செயல்பாடு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதுண்டு. இந்த சூழலில் மெட்டா நிறுவனம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
