அந்த வகையில், சென்னை மதுரவாயல்- போரூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையின் போது தனியார் ஏஜென்சி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் டாஸ்மாக் கடைகளில் வசூலானது என கூறப்படுகிறது. மேலும் டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து உரிய ஆவணம் கொண்டு வந்ததை அடுத்து மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
