நொய்டா: உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும், என்றும் அதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சி அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கு ஆசிய போர் பதற்றம் குறித்து குறிப்பிட்ட அவர், “இதுபோன்ற சமயங்களில் அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவதை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய வேண்டும். இதற்கு 140 கோடி மக்களின் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும் அவசியம். நேரத்தைச் சேமித்து செலவுகளைக் குறைப்பதன் மூலம் மக்களின் வசதியை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியை நாம் அமைதியாகவும் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். இது ஒரு உலகளாவிய நெருக்கடி. ஆனால், நாம் இந்தியாவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதுவே நமது மிகப் பெரிய பலம்.
